Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பருப்பு கீரையை அடிக்கடி எடுத்துக்கொள்வதால் என்ன நன்மைகள் தெரியுமா...?

பருப்பு கீரையை அடிக்கடி எடுத்துக்கொள்வதால் என்ன நன்மைகள் தெரியுமா...?
, செவ்வாய், 18 ஜனவரி 2022 (19:15 IST)
பருப்புகீரையில் ஒமேகா 3, வைட்டமின் பி, கரோட்டீனும் அதிகமாக இருப்பதால் கண் பார்வை திறனை இது பாதுகாக்கிறது. குறைந்தது வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு வேளைகளாவது பருப்புக் கீரை உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.


பருப்புக் கீரையை அடிக்கடி எடுத்துக் கொள்வதால் குடல் புழுக்கள் அழியும். மலச்சிக்கல் நீங்கும். குடல் சுத்தமாகும். ஒல்லியானவர்கள் சதை போடுவார்கள். அதிகம் சதை போடாமல் இருக்க சிறிது தயிர் சேர்த்து சாப்பிட்டால் நல்லது.

வயிற்றுப் போக்கும் ஏற்பட்டால், இரண்டு பிடி கீரையை ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி அருந்தினால் போதும், வயிற்றுப் போக்கு கட்டுப்படும்.

தாய்ப்பால் நன்கு சுரக்க பெண்கள் தினம் ஒருவேளை இந்த கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் பால் நன்கு சுரக்கும். மேலும், மாதவிடாய் பிரச்சனைகளும், பித்தக் கோளாறும், உடல் வீக்கமும் குணமாகும்.

கை, கால் எரிச்சல், புண்கள், கொப்புளங்கல் ஏற்பட்டால் அந்த இடத்தில் இக்கீரையை நன்கு அரைத்து (தண்டையும் சேர்த்துக் கொள்ளலாம்), தடவி வந்ததால் பூரண குணமாகும்.

பருப்புக் கீரை மசியலுடன், நீராகாரம் சேர்த்து சாப்பிட்டு வர, வெயில் காலத்தில் ஏற்படுகிற உடல் சூடு, நீர்க்கடுப்பு, வியர்க்குரு, வேனல்கட்டிகள் போன்றவை தவிர்க்கப்படும்.

வாரம் மூன்று அல்லது நான்கு வேளை சாப்பிட்டு வந்தால் கல்லீரலை சிறப்பாக இயங்க வைத்து ரத்ததை சுத்தப்படுத்துகிறது. மேலும், தோலிற்கு பளபளப்பான தோற்றத்தை தருகிறது.

இக்கீரையில் பொட்டாசியம், சோடியம் இருப்பதால் ரத்தக் கொதிப்பு, பக்கவாதம், மாரடைப்பு போன்றவைகள் ஏற்படாது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செரிமானத்தை சீராக்க உதவுகிறதா பீச் பழம் !!