Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாகற்காயை உணவில் சேர்த்துக்கொள்வதால் இத்தனை நன்மைகளா...!!

பாகற்காயை உணவில் சேர்த்துக்கொள்வதால் இத்தனை நன்மைகளா...!!
பாகற்காயை அடிக்கடி எடுத்துக் கொள்ளும்போது அது ரத்தத்தில் கலந்து இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. இதனால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். 

பாகற்காயுடன் இஞ்சி, வெந்தயம், சோம்பு சேர்த்து கடுகு எண்ணெயில் சமைத்து சாப்பிட்டால் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
 
பாகற்காயில் நார்சத்து அதிகமாக உள்ளதால் நாம் சாப்பிட்ட உணவு நன்கு செரிமானமாக உதவுகிறது. இது மூலம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை பாகற்காய் போக்குகிறது.
 
பாகற்காயை ஜூஸ் போட்டு குடித்தால், குடலில் உருவாகும் புழுக்கள், ஒட்டுண்ணிகளைக் கொல்ல உதவும். ஒவ்வாமை, வீக்கம், கட்டிகளையும் பாகற்காய் நீக்கும்.
 
சிறுநீரகம், சிறுநீர்ப்பை மற்றும் அது தொடர்பான உறுப்புக்கள் அனைத்தையும் சிறப்பாக பாதுகாக்க பாகற்காய் உதவுகிறது. சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்கவும் பாகற்காய் பயன்படுகிறது. வாரம் ஒருமுறை பாகற்காய் சமைத்து சாப்பிட்டு வர சிறுநீரகத்திற்கு நல்லது.
 
பாகற்காய் சாற்றை எலுமிச்சைச் சாறுடன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் ஆறு மாத காலம் குடித்துவர, முகப்பரு பிரச்சனை நீங்கும். மேலும், சிரங்கு, அலர்ஜி, அரிப்பு, படர்தாமரை, சொரியாஸிஸ், போன்ற தோல் சம்பந்தமான பிரச்சனைகளை தீர்க்கும்.
 
அடிக்கடி உணவில் எடுத்துக்கொண்டால் ரத்தத்தில் வெள்ளையணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்து நோயெதிர்ப்பு சக்தியை உடலுக்கு அளிக்கிறது. இதனால், உடலை நோய் தொற்றிலிருந்து காக்கிறது.
 
வாரத்திற்கு இரண்டு, மூன்று முறை பாகற்காய் உணவில் சேர்த்துக் கொண்டால் கல்லீரலில் இருக்கும் நச்சு கிருமிகளை அகற்றி கல்லீரலை ஆரோக்கியமாக பாதுகாக்கிறது. அல்லது, தினமும் ஒரு கப் பாகற்காய் ஜூஸ் குடித்துவர, கல்லீரல் பிரச்னைகள் நீங்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி...?