Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அன்றாட உணவில் பாலக்கீரையை எடுத்துக்கொள்வதால் என்ன நன்மைகள் !!

Webdunia
திங்கள், 2 மே 2022 (16:03 IST)
பாலக்கீரையில் புரத சத்து நிறைந்துள்ளது, எனவே இந்த கீரையை தினமும் எடுத்து கொண்டால் மாரடைப்பு, ரத்த குழாய்கள் அடைப்பு போன்ற இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்.


பாலக்கீரையில் வைட்டமின் ஏ அதிக அளவு நிறைந்து காணப்படுகிறது. இதில் மெக்னீசியம், ஜிங்க், காப்பர் மற்றும் விட்டமின் கே அதிகம் உள்ளதால் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாக இருப்பதற்கு உதவுகிறது.

பாலக் கீரை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவை நிலையாக வைத்திருக்க இந்த கீரை உதவுகிறது. பாலக் கீரையானது புற்று நோய் செல்கள் உருவாகாமல் தடுத்து நிறுத்த கூடியது.

பாலக் கீரையை அதிகம் எடுத்து கொண்டால் ரத்தத்தில் ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகமாகும். இதனால் ரத்த சோகை நோய் வராமல் தடுக்க உதவுகிறது.

கர்ப்பிணிகளுக்கு தேவையான அத்தியாவசிய சத்தான போலிக் ஆசிட் இந்த கீரையில் அதிகம் உள்ளது. கர்ப்பிணிகள் இதனை அதிகம் எடுத்துக் கொண்டால் நல்லது.

பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த கீரையை உணவோடு எடுத்து கொண்டால் பால் அதிகம் சுரக்கும். பாலக்கீரையில் புரத சத்து நிறைந்துள்ளது, எனவே இந்த கீரையை தினமும் எடுத்து கொண்டால் மாரடைப்பு, ரத்த குழாய்கள் அடைப்பு போன்ற இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்.

கண் பார்வை நன்றாக தெரிய பாலக் கீரை உதவி செய்கிறது. கண்ணில் ஏற்படும் நோய்களான மாலைக்கண் நோய், மற்றும் கண்களில் ஏற்படும் அரிப்பு, போன்றவை வராமல் தடுக்கும் தன்மை கொண்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முட்டைகோஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

வெண்டைக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

தினசரி மிளகு ரசம் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்..!

ஆண்டிபயாடிக் மருந்துகளால் 10 லட்சம் இந்தியர்கள் பலி? - அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு முடிவு!

சர்க்கரைக்கு பதில் கருப்பட்டி பயன்படுத்துங்கள்.. கருப்பட்டியால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments