Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிகரிக்கும் கொரோனா! இன்று ஒரு லட்சம் தடுப்பூசி முகாம்கள்!

அதிகரிக்கும் கொரோனா! இன்று ஒரு லட்சம் தடுப்பூசி முகாம்கள்!
, ஞாயிறு, 10 ஜூலை 2022 (08:55 IST)
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரித்து வரும் சூழலில் இன்று பிரம்மாண்ட தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புகள் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்திருந்தது. இந்நிலையில் சமீப காலமாக கொரோனா பாதிப்புகள் மீண்டும் மெல்ல உயரத் தொடங்கி தற்போது 3 ஆயிரத்தை எட்டியுள்ளன. இதனால் தமிழகம் முழுவதும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இன்று தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் பகுதிகளில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன. தமிழகத்தில் முதல் டோஸ், இரண்டாவது டோஸ் மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் எண்ணிக்கை 1.45 கோடியாக உள்ளது. சென்னையில் மட்டும் 13,72,219 பேர் முதல் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் உள்ளனர்.

இதனால் சென்னையில் வார்டுக்கு 17 இடங்களில் தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் இன்றைய முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்! – பிரதமர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து!