Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 ஆயிரம் கோடியை விழுங்கிய கஜா புயல்: தமிழக அரசு பரபரப்பு தகவல்

Webdunia
திங்கள், 19 நவம்பர் 2018 (11:08 IST)
கஜா புயலால் 10,000 கோடி அளவுக்கு சேதமடைந்திருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
கஜா புயலால் நாகை, திருவாரூர், தூத்துக்குடி, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, திருச்சி, வேதாரண்யம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் சீர்குலைந்து போயுள்ளன. 
 
பேயாட்டம் ஆடிய கஜாவால் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர். குடிக்க தண்ணீரின்றி, உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி தவித்து வருகின்றனர். 1000க் கணக்கான கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 50 க்கும் மேற்பட்ட மனிதர்கள் உயிரிழந்துள்ளனர். 1,00,000 மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. நிவாரணப் பணிகளும், மறு சீரமைப்புப் பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகிறது.
 
நாளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேதமடைந்த பகுதிகளை பார்வையிட இருக்கிறார்.
 
இந்நிலையில் கோரதாண்டவம் ஆடிய இந்த கஜா புயலால் சுமார் 10,000 கோடி அளவிற்கு சேதங்கள் ஏற்பட்டிருப்பதாகவும், முதல்கட்டமாக சீரமைப்புக் பணிகளுக்காக தமிழக அரசு சார்பில் 500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments