Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.கே.நகரில் ஒரே நாளில் தாக்கலான 101 வேட்புமனுக்கள்

Webdunia
செவ்வாய், 5 டிசம்பர் 2017 (08:32 IST)
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் நேற்றுடன் வேட்புமனு தாக்கல் முடிந்தது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 101 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் சுயேட்சைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று மனுதாக்கல் செய்தவர்களின் நடிகர் விஷால் மற்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். நேற்று வேட்புமனுதாக்கல் செய்த 101 பேர்களையும் சேர்த்து மொத்தம் 131 பேர் ஆர்.கே.நகரில் போட்டியிடுகின்றனர்.

131 பேர்களின் சின்னம் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவு செய்ய வாய்ப்பில்லை என்பதால் இந்த தேர்தலுக்கு வாக்குச்சீட்டு பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

வேட்புமனுக்கள் இன்று பரிசீலிக்கப்படவுள்ள நிலையில் வரும் 7ஆம் தேதி வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி தேதி ஆகும். அன்றுதான் இறுதி வேட்பாளர் பட்டியல் தெரியவரும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக முதல்வர் குறித்து இவ்வளவு கொச்சையாக பேசுவதா.? சி.வி சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா எப்போது? கரகோஷத்துடன் நடப்பட்ட பந்தக்கால்..!

தஞ்சாவூர், சேலத்தில் மினி டைடல் பூங்கா.! காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.!!

39 டாஸ்மாக் கடைகளை உடனே அகற்றுங்கள்: தமிழக அரசுக்கு ரயில்வே துறை கடிதம்..!

நாளை மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழையா?

அடுத்த கட்டுரையில்
Show comments