Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..வானிலை ஆய்வு மையம்

Siva
திங்கள், 26 பிப்ரவரி 2024 (08:50 IST)
தமிழகத்தில் கோடை காலம் கிட்டத்தட்ட ஆரம்பித்துவிட்ட நிலையில் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இருப்பினும் அதிகாலை நேரத்தில் பனி பொழிந்து வருகிறது என்றும் அவ்வப்போது சில மாவட்டங்களில் மழை பெய்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என்ன சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி, தேனி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இருப்பினும் இனி வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்கவே வாய்ப்பு இருப்பதாகவும் தமிழகம் முழுவதும் பொதுவாக வறண்ட வானிலையே காணப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

மேலும் கோடை காலம் நெருங்கி வருவதால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments