Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை 18 மாவட்டங்களில் அனல் காற்றும் வீசும்; வானிலை ஆய்வு அமையம் எச்சரிக்கை

Webdunia
திங்கள், 17 ஏப்ரல் 2017 (21:01 IST)
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில் நாளை வழக்கத்தை விட அதிக அளவு வெயில் இருக்கும் என்றும், அனல் காற்றும் வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


 

 
தமிழகத்தில் நாளை வழக்கத்தை விட அதிகமாக வெயில் இருக்கும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலுார், கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கரூர், திருச்சி, தர்மபுரி, வேலூர், நாகை, புதுக்கோட்டை, நாமக்கல், பெரம்பலூர், சேலம், ஈரோடு ஆகிய 18 மாவட்டங்களில் அனல் காற்று வீசும். எனவே பொதுமக்கள் மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம், என சென்னை வானியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
மேலும் 18 மாவட்ட ஆட்சியர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு மாநில பேரிடர் மேலாண்மை வாரியம் அறிவுறுத்தியுள்ளது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.80 கட்டணத்தில் நாள் முழுவதும் பயணம்.. ராமேஸ்வரம் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

சிறுமி கொலை வழக்கு.! கைதானவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நிறைவு..!!

பதவியை ராஜினாமா செய்த உயர்நீதிமன்ற நீதிபதி.. பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டி..!

பம்பரம் சின்னம் கோரிய வழக்கு.! தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு.!!

.விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பெண் பயணி!

அடுத்த கட்டுரையில்
Show comments