Publish Date: Sat, 10 Apr 2021 (07:57 IST)
Updated Date: Sat, 10 Apr 2021 (08:12 IST)
சென்னையில் 40 சைக்கிள்களை திருடிய குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குரோம்பேட்டை, தாம்பரம், பல்லாவரம் ஆகிய பகுதிகளில் அதிக அளவு சைக்கிள்கள் சமீபகாலமாக திருடு போயுள்ளன. இது சம்மந்தமாக அளிக்கப்பட்ட புகாரை அடுத்து சிசிடிவி கேமராக்களை வைத்து சோதனை செய்ததில் திருநீர்மலையைச் சேர்ந்த குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து சுமார் 40 சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இத்தனை சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டாலும், அதன் உரிமையாளர்களைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது