Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 28 May 2025
webdunia

சாக்லெட் கொடுத்து சிறுவனுடன் இன்பம் கொண்ட அங்கில்: காலக் கொடுமைடா சாமி...

Advertiesment
சென்னை
, புதன், 24 ஜூலை 2019 (15:12 IST)
சென்னையில் 7 வயது சிறுவனுக்கு சாக்லெட் வாங்கி கொடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபருக்கு 10 ஆண்டு சிரை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னையில் உள்ள வியாசர்பாடியை சேர்ந்த சாரங்கபாணிக்கு 42 வயது ஆகிறது. இந்த நபர் தனது வீட்டின் அருகே உள்ள 7 வயது சிறுவனை சாக்லெட் வாங்கி கொடுப்பதாக கூறி அழைத்து சென்றுள்ளான். 
 
சொன்னபடி சாக்லெட் வாங்கி கொடுத்து அந்த சிறுவனிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளான். மேலும், அந்த சிறுவனையும் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடும் படி வற்புறுத்தியுள்ளான். பின்னர் இதை யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி அனுப்பி வைத்துள்ளான். 
 
ஆனால், அந்த சிறுவன் இது குறித்து தன்னுடைய பெற்றோருடம் தெரிவிக்க அவர்கள் உடனடியாக போலீஸில் புகார் அளித்துள்ளனர். இந்த வழக்கை கையில் எடுத்த போலீஸார் நீண்ட விசாரணைக்கு பின்னர் சாரங்கபாணியை கோர்ட்டில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
 
சாரங்கபாணி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் – அபராதமாக 3309 கோடி வசூல் !