Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு 63 மருத்துவர்கள் பலி: அதிர்ச்சி தகவல்

Webdunia
வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (17:16 IST)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தினமும் 50 முதல் 100 பேர் வரை பலியாகி வருகின்றனர் என்றும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம் 
 
இந்த நிலையில் அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி பதவியில் இருக்கும் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அமைச்சர்கள் உள்பட பல விவிஐபிக்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் அவர்களில் ஒருசிலர் பலியாகி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள மருத்துவர்கள் குறித்த தகவல் வெளிவந்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கொரோனாவால் வைரஸால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை தரும் மருத்துவர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் சிகிச்சை செய்து வருகின்றனர். அவ்வாறு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும் சிலர் கொரோனாவால் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
இந்த கொரோனா காலத்தில் தமிழகத்தில் மொத்தம் 63 மருத்துவர்கள் உயிரிழந்ததாக இந்திய மருத்துவ கழகம் சற்றுமுன் தெரிவித்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் 12 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ கழகம் தெரிவித்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments