Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடைத்த கழிவுநீர் குழாயை சீர் செய்ய கோரி திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பிய 6ம் வகுப்பு மாணவி!

J.Durai
புதன், 14 ஆகஸ்ட் 2024 (10:12 IST)
திருச்சி கே.கே நகரை சேர்ந்த பஞ்சாமி மகள் கனிஷ்கா (11). இவர் திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.
 
இவர் திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியிருக்கிறார்.
 
அதில் கே.கே நகர் ஓழையூர் சாலையில் குருஞ்சி நகர் அருகே பாதாள சாக்கடை குழாய் உடைந்து கழிவு நீர் வெளியேறி வருகிறது.
 
இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்களின் துர்நாற்றத்தினால் முகம் சுழித்து செல்கின்றனர். மேலும் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவதுடன் குடியிருப்பு வாசிகள் நோய்த்தொற்றுக்கு ஆளாகும் அவலநிலை ஏற்பட்டிருக்கிறது.
 
எனவே எவ்வித காலதாமதம் இன்றி உடனடியாக இதனை சீர் செய்ய சம்பந்தப்பட்ட ஊழியருக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என பள்ளி மாணவி கனிஷ்கா அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கெஜ்ரிவால் ஜாமீன் ஹரியானா தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்ன சொல்கிறது காங்கிரஸ்?

சாலையில் தீப்பிடித்து எரிந்த காரில் கட்டுக்கட்டாக ரூ.2000 நோட்டுகள்.. சினிமா தயாரிப்பாளரா?

ராணுவ ஸ்டிக்கர் ஒட்டி போலி மது பாட்டில்கள் விற்பனை.! முன்னாள் ராணுவ வீரர் கைது.!!

முதலமைச்சர் அலுவலகத்திற்கு செல்லக்கூடாது.! கோப்புகளில் கையெழுத்து போடக்கூடாது - கெஜ்ரிவாலுக்கு நிபந்தனை..!!

தாலிக்கு தங்கம் திட்டம்.! தமிழக அரசிடம் அறிக்கை கேட்கும் உயர்நீதிமன்றம்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments