Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழிசைக்கு ஒன்றும் தெரியாது, தேர்தல் அறிக்கையை குப்பையில் போடுங்கள்: சுப்பிரமணியன் சுவாமி

Webdunia
வெள்ளி, 22 மார்ச் 2019 (08:07 IST)
திராவிட கட்சிகளின் தேர்தல் அறிக்கையை குப்பையில் தான் போட வேண்டும் என்றும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர்களின் விடுதலை சாத்தியமில்லை என்றும் பாஜக பிரமுகர் சுப்பிரமணியம் சுவாமி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

7 பேர் விடுதலை குறித்து தமிழிசை கூறியுள்ள கருத்து குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த சுவாமி, 'தமிழிசை ஒரு மாநில தலைவர், அவருக்கு டெல்லியில் உள்ள நிலைமை தெரியாது' என்று கூறினார். ராஜீவ் கொலையாளிகள் விடுதலை குறித்து டெல்லி தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர்களை அவ்வளவு எளிதில் விடுதலை செய்ய விடமாட்டோம்' என்றும் சுவாமி தெரிவித்தார்

மேலும் ஐந்து சீட் கொடுத்த கூட்டணிக்கு என்னால் பிரச்சாரம் செய்ய முடியாது. தனியாக போட்டியிட்டிருந்தால் நானே களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்திருப்பேன் என்றும் சுப்பிரமணியன் சுவாமி மேலும் தெரிவித்தார்.

சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவ்வப்போது தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் சுப்பிரமணியன் சுவாமி, 7 பேர் விடுதலை குறித்தும் தமிழக பாஜக குறித்தும் கூறிய இந்த கருத்து தமிழக மக்கள் மற்றும் தமிழக பாஜக மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments