Webdunia - Bharat's app for daily news and videos

Install App

500 ரூபாய் லஞ்சம் பெற்ற சார் பதிவாளருக்கு 8 ஆண்டுகள் சிறை!

Webdunia
ஞாயிறு, 17 டிசம்பர் 2017 (13:28 IST)
ரூ.500 லஞ்சம் பெற்ற சார் பதிவாளருக்கு ஈரோடு நீதிமன்றம்  8 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டியாளையத்தில் மேக்லீன் முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இதன் ஆலோசகரான புஷ்பராஜ் ஆண்டுதோறும் இல்லத்தின் வரவு-செலவு கணக்கை சார் பதிவாளரிடம் ஒப்புதல் பெற்று, மாவட்ட பதிவாளரிடம் சமர்பித்து வந்தார். 
 
இந்நிலையில் கடந்த 2004-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சார் பதிவாளராக இருந்த தங்கவேல் என்பவரிடம் புஷ்பராஜ் வரவு செலவு கணக்கை சமர்பித்துள்ளார். ஆனால் ஒப்புதல் அளிக்க தங்கவேல், புஷ்பராஜிடம்  ரூ.500 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, புஷ்பராஜ் அளித்த புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் மறைந்திருந்து தங்கவேல் லஞ்சம் பெறும்போது கையும் களவுமாக பிடித்தனர்.
  
இந்தவழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால்,   ஈரோடு முதன்மை நீதிமன்றம் சார் பதிவாளர் தங்கராஜிக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து அதிரடியாக தீர்ப்பளித்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments