Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோல்வியில் முடிந்த 80 மணி நேரப் போராட்டம்! சடலமாக மீட்கப்பட்ட சுஜித் உடல்!

Webdunia
செவ்வாய், 29 அக்டோபர் 2019 (06:18 IST)
கடந்த வெள்ளியன்று நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணறு ஒன்றில் தவறி விழுந்த சுஜித் என்ற 2 வயது சிறுவனை மீட்க கடந்த 80 மணி நேரமாக நடந்த மீட்புப்போராட்டம் தோல்வியில் முடிந்தது
 
இன்று அதிகாலை 2 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் இருந்து துர்நாற்றம் வந்ததை அடுத்து சுஜித் இறந்துவிட்டதாக அதிகாரிகள் அறிவித்து அதன்பின் சுஜித்தின் உடலை இரண்டு மணி நேரம் போராடி தேசிய மீட்புப்படையினர் மீட்டனர்.
 
சுஜித்தின் உடல் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தற்போது மருத்துவர் குழு ஒன்றால் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. பிரேத பரிசோதனைக்கு பின் சுஜித்தின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு அதன்பின் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. மருத்துவமனையில் சுஜித்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த அமைச்சர்கள், அதிகாரிகள் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments