Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாசின் முக்குலத்தோர் புலிப்படைக்கு தடையா?

Webdunia
வெள்ளி, 5 அக்டோபர் 2018 (22:13 IST)
சமீபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குறித்தும், காவல்துறை அதிகாரி குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருணாஸ் எம்.எல்.ஏ, ஜாதிப்பிரிவினையை தூண்டும் வகையில் பேசியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த நிலையில் கருணாசின் முக்குலத்தோர் புலிப்படை அமைப்புக்கு தடை விதிக்க  வேண்டும் என அகில இந்திய அகமுடையார் மகா சபையினர் முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளனர்.

இதுகுறித்து அகில இந்திய அகமுடையார் மகா சபையினர் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, 'நடிகரும், எம்எல்ஏவுமான கருணாஸ் அண்மைக்காலமாக பிற சமூகத்தினரைப் பற்றி அவதூறாக பேசி வருகிறார்.

இளைஞர்களை தவறாக வழிநடத்தி, தென் மாவட்டங்களில் சாதிக் கலவரங்களை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறார். எனவே, கருணாசின் அமைப்பான முக்குலத்தோர் புலிப்படை அமைப்புக்கு தடை விதிக்கவேண்டும்' என மனுவில் குறிப்பிட்டுள்ளதாகவும், இந்த மனு முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கும் காவல்துறை டி.ஜி.பி. அலுவலகத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அகில இந்திய அகமுடையார் மகாசபையினர் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments