Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்யாணம் பண்ணிக்கலாம்.. ஆனா அதுக்கு முன்னாடி – இளம்பெண்ணை ஏமாற்றிய மாணவர்

Webdunia
சனி, 1 ஜூன் 2019 (17:23 IST)
தேனி அருகே உள்ள கூடலூர் பகுதியை சேர்ந்தவர் கிஷோர்பாண்டி. சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இவரும் அவரது ஊரை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் பல வருடங்களாய் காதலித்து வந்திருக்கிறார்கள். தற்போது அந்த பெண் பெங்களூரில் நர்சிங் படித்து வருகிறார்.

இருவரும் வெவ்வேறு ஊர்களில் படித்து வந்தாலும் செல்போன் மூலம் ஒருவரோடு ஒருவர் பேசி காதலித்து வந்துள்ளனர். அப்போது கிஷோரை காண்பதற்காக அந்த பெண் அடிக்கடி சென்னை வந்து போயிருக்கிறார். அப்போது கிஷோர் திருமணம் செய்து கொள்ளலாம் என அந்த பெண்ணுக்கு உறுதியளித்து, அடிக்கடி அந்த பெண்ணோடு உறவில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி கிஷோரிடம் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு கிஷோர் நம்பகமான பதில் எதையும் சொல்லவில்லை. மேலும் கிஷோரின் குடும்பத்தினர் அந்த பெண்ணை போனில் மிரட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். வழக்குப்பதிவு செய்த போலீஸார் கிஷோரையும் அவரது குடும்பத்தினரையும் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments