Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சரான வேன்; நடுரோட்டில் அமர்ந்த பெண்கள் பரிதாப சாவு! – முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 11 செப்டம்பர் 2023 (12:54 IST)
திருப்பத்தூர் அருகே லாரி மோதி 7 பெண்கள் பலியான சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்துள்ளார்.



திருப்பத்தூர் அருகே சாலையில் இரவில் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று பஞ்சராகி நின்றுள்ளது. வேனை சரிசெய்யும் வரை வேனில் இருந்த சில பெண்கள் காற்றோட்டமாக சாலையின் நடுவில் அமர்ந்திருந்துள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி ஒன்று மோதியதில் சாலையில் அமர்ந்திருந்த பெண்கள் 7 பேர் பரிதாபமாக நசுங்கி உயிரிழந்தனர்.

மேலும் படுகாயம் அடைந்த 10 பேர் சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிகாலையில் நடந்த இந்த கோர சம்பவம் குறித்து அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் கோர விபத்திற்கு தனது இரங்கல்களை தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சமும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments