Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கெட்ட வார்த்தையில் திட்டிய ஆசிரியை: தற்கொலைக்கு முயன்ற மாணவி

Webdunia
செவ்வாய், 30 அக்டோபர் 2018 (15:50 IST)
நாகர்கோவிலில் ஆசிரியை ஒருவர் மாணவியை கெட்ட வார்த்தையில் திட்டியதால் மனமுடைந்த அந்த மாணவி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில் புத்தேரி பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வருகிறார். பள்ளிக்கு சென்ற அந்த மாணவியை  உதவி தலைமை ஆசிரியை கெட்ட வார்த்தையால் திட்டியதுடன் அடித்ததாக கூறப்படுகிறது.
 
இதனால் மனமுடைந்த அந்த மாணவி பள்ளியின் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். படுகாயமடைந்த அந்த மாணவி தற்பொழுது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
 
தங்கள் மகளின் தற்கொலை முயற்சிக்கு காரணமான அந்த ஆசிரியை மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என அந்த மாணவியின் பெற்றோர் போராட்டம் நடத்திய நிலையில், போலீஸார் சம்மந்தப்பட்ட ஆசிரியை மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments