Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீலகிரியில் வாகனத்தை துரத்திய புலி: டாப் கியரில் எஸ்கேப்!

Webdunia
புதன், 13 நவம்பர் 2019 (09:35 IST)
நீலகிரியில் சுற்றுலா பயணிகள் வாகனத்தை புலி ஒன்று துரத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரியில் உள்ள முதுமலை புலிகள் சரணாலயத்தில் யானை, புலி, சிறுத்தை என காட்டு விலங்குகள் பல வாழ்ந்து வருகின்றன. வன விலங்குகளை காண சுற்றுலா பயணிகள் ரோந்து வாகனங்கள் மூலம் காட்டுக்குள் செல்வது வழக்கம்.

அதுபோல ரோந்து வாகனம் ஒன்றில் சென்ற பயணிகள் மரத்தினடியில் படுத்திருந்த புலியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். திடீரென அந்த புலி ரோந்து வாகனத்தை நோக்கி வேகமாக வர தொடங்கியுள்ளது. இதை பார்த்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக ரோந்து வாகனத்தை கிளப்பியுள்ளனர். வாகனத்தின் பின்னே சிறிது தூரம் துரத்தி வந்த புலி பிறகு பின்வாங்கியுள்ளது.

சுற்றுலா பயணிகளை தாக்க புலி துரத்தி வந்த சம்பவம் முதுமலை சரணாலயத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments