Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உல்லாசத்திற்கு இடைஞ்சலாக இருந்த கணவன்: மனைவி செய்த வெறிச்செயல்

Webdunia
திங்கள், 26 நவம்பர் 2018 (13:53 IST)
ராமநாதபுரத்தில் உல்லாசத்திற்கு இடைஞ்சலாக இருந்த கணவனை மனைவி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ராமநாதபுரம் கமுதியையடுத்த ராமசாமிபட்டியை சேர்ந்த ஜெயராஜ். இவரது மனைவி பொன்மணிக்கு கடந்த 3 ஆண்டுகளாக அசோக் என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. ஜெயராஜ் அவ்வப்போது வியாபாரம் நிமித்தமாக வெளியூர் செல்லும் நேரத்தில் பொன்மணி அசோக்குடன் உல்லாசமாக இருந்துள்ளார். கணவன் உயிரோடு இருந்தால் கள்ளக்காதலை தொடரமுடியாது என நினைத்த பொன்மணி கள்ளக்காதலனுடன் சேர்ந்து ஜெயராஜை கொல்ல திட்டமிட்டார்.
 
அதன்படி வெளியூர் சென்று வீடு திரும்பிய ஜெயராமை, பொன்மணி தனது கள்ளக்காதலனோடு சேர்ந்து வெட்டி கொலை செய்தார்.
 
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் ஜெயராஜின் உடலை மீட்டனர். இதுகுறித்து விசாரணை நடத்தியதில் பொன்மணி கள்ளக்காதலனோடு சேர்ந்து கணவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீஸார் அசோக்கையும் பொன்மணியையும் கைது செய்தனர். இச்சம்பவம் கமுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments