Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளக்காதலால் உருவாகிய கருவை கலைக்க முயற்சித்த பெண் பரிதாப பலி

Webdunia
செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (08:58 IST)
திருவண்ணாமலையில் கருவை கலைக்க, நாட்டு மருந்தை சாப்பிட்ட பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் களம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு 10 வயதில் மகள் உள்ளார். கணவன் மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆறு ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்தனர்.
 
இந்நிலையில் கணவனை பிரிந்து இருக்கும் சுமதிக்கு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டது. இதில் சுமதி ஆறு மாதம் கர்ப்பமானார். சுமதி நாட்டு மருந்து மூலம் கருவை கலைக்க ஜெயலட்சுமி என்பவரை நாடினார். 
 
இதனையடுத்து ஜெயலட்சுமி கொடுத்த நாட்டு மருந்தை சுமதி சாப்பிட்டார். சாப்பிட்ட சிறிது நேரத்தில் சுருண்டு விழுந்த சுமதி அங்கேயே இறந்தார். விஷயமறிந்து  சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சுமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீஸார் ஜெயலட்சுமியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments