Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு நடிகர் ஹரிஸ் கல்யாண் நன்கொடை!

முதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு நடிகர் ஹரிஸ்  கல்யாண் நன்கொடை!
, புதன், 6 டிசம்பர் 2023 (15:05 IST)
சென்னையில் மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய பாதிப்பு மற்றும் மழை வெள்ளத்தால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளனர். அவருக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை அரசு துரிதமாக செய்து வருகிறது.

இந்த நிலையில், "மிக்ஜாம்" புயல், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உதவிடும் பணியில் தனிநபர் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள தமிழ்நாடு அரசின் “வாட்ஸ்அப்” எண்கள் (அலுவலர் மற்றும் வாட்ஸ்அப் எண்கள் விவரம் திரு. ஷேக் மன்சூர், உதவி ஆணையர் - 9791149789, திரு. பாபு, உதவி ஆணையர் - 9445461712 ,திரு. சுப்புராஜ், உதவி ஆணையர்- 9895440669 , பொது-7397766651) அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில்,  வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்ட மக்களுக்கு கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமாவிடம் ரூ. 3 லட்சம் மதிப்பிலான உணவுப் பொருட்கள், மருந்து, துணி வகைகளை சமூ அமைப்புகள் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில், மிக்ஜாம் புயல் பாதிப்பு மீட்பு பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார் நடிகர் ஹரிஸ் கல்யாண்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த 3 நாட்களுக்கும் மழை தொடரும்.. எந்தெந்த மாவட்டங்களில்? – வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு!