Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவரிடம் ரூ.2.50 லட்சம் ஜீவனாம்சம் கேட்டு நடிகை ரம்பா மனு

கணவரிடம் ரூ.2.50 லட்சம் ஜீவனாம்சம் கேட்டு நடிகை ரம்பா மனு

Webdunia
வியாழன், 27 அக்டோபர் 2016 (17:32 IST)
மாத செலவுக்கு ரூ.2.50 லட்சம் ஜீவனாம்சமாக தன்னுடைய கணவன் தரவேண்டும் என்று நடிகை ரம்பா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.


 

 
நடிகை ரம்பா தனது கணவரிடமிருந்து விவகாரத்து கோரி, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததாக சமீபத்தில் செய்தி பரவியது. ஆனால், பிரிந்திருக்கும் தனது கணவருடன் சேர்த்து வைக்க கோரித்தான் அவர் மனு செய்தார் என்று அன்று மாலையே செய்தி வெளியானது. 
 
இந்நிலையில், தனக்கும், தன்னுடைய இரண்டு குழந்தைகளுக்கும் செலவுக்காக மாதம் ரூ.2.50 லட்சத்தை, தனது கணவர் ஜீவனாம்சமாக தர வேண்டும் என உத்தரவிடக் கோரி, மற்றொரு மனுவை ரம்பா நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
 
அந்த மனுவில் ‘நான் தற்போது நடிப்பதை நிறுத்தி விட்டேன். எனவே, எனது 2 குழந்தைகளுக்கான படிப்பு மற்றும் மருத்துவ செலவிற்காக என்னுடைய கணவர் மாதம் தோறும் ரூ.2.50 லட்சத்தை தர உத்தரவிட வேண்டும்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 
 
இந்த மனு, வருகிற டிசம்பர் 3ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments