Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வளர்மதி, கோகுல இந்திராவுக்கு பதவி: அதிமுக அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளராக நியமனம்!

Webdunia
புதன், 3 ஜனவரி 2018 (13:03 IST)
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், எடப்பாடி தலைமையில் நடைபெற்றது. இதில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்கள் 12 பேரை அறிவித்துள்ளனர்.
 
ஆர்கே நகர் இடைத்தேர்தலின் போது அதிமுக சார்பில் யாரும் ஊடக விவாதங்களில் கலந்துகொண்டு பேச வேண்டாம், அதிகாராப்பூர்வ செய்தித் தொடர்பாளர்கள் யாரையும் இதுவரை நியமிக்கவில்லை என அறிவிப்பு வெளியானது.
 
இந்நிலையில் இன்று நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அதிமுக அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்கள் பட்டியலை வெளியிட்டனர். அதில், அதிமுகவின் கொள்கைகள், தலைமைக் கழக முடிவுகள் உள்ளிட்டவற்றை ஊடகங்கள், செய்தி நிறுவனங்களுக்கு வழங்கும் செய்தித் தொடர்பாளர்களாக 12 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
பேராசிரியர் தீரன், கே.சி.பழனிசாமி, பாபு முருகவேல், மகேஸ்வரி, ஜே.சி.டி.பிரபாகர், கோ.சமரசம், கோவை செல்வராஜ், மருது அழகுராஜ், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், வளர்மதி, கோகுல இந்திரா, வைகைச்செல்வன் ஆகிய 12 பேர் இனி வரும் காலங்களில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்களாக செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments