Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இணைந்தது அதிமுக அணிகள்: ஒரு தாய் மக்கள் என ஓபிஎஸ் பெருமிதம்!

இணைந்தது அதிமுக அணிகள்: ஒரு தாய் மக்கள் என ஓபிஎஸ் பெருமிதம்!

Webdunia
திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (15:19 IST)
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக அணிகளாக பிளவுபட்டது. சசிகலாவுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் ஓபிஎஸ் தனி அணியாக செயல்பட்டு வந்தார். இதனையடுத்து சசிகலா அணி எடப்பாடி அணியாக மாறியதை அடுத்து ஓபிஎஸ் அணியை மீண்டும் அதிமுகவுடன் இணைக்க முயற்சிகள் நடைபெற்று வந்தது.


 
 
இந்த இணைப்பு பல மாத முயற்சிக்கு பின்னர் தற்போது நடந்துள்ளது. கடந்த சில தினங்களாக அதிமுக அணிகள் இணையப்போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில் இன்று காலை இந்த இணைப்பு ஜெட் வேகத்தில் நடந்து வந்தது.
 
காலையில் இருந்து நடந்து வந்த பேச்சுவார்த்தைகள் ஒரு வழியாக முடிவுக்கு வந்து, தற்போது ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் தற்போது ஒன்றாக அதிமுக தலைமை கழக அலுவலகத்தில் ஒன்றாக சேர்ந்துள்ளது.
 
6 மாத கால இடைவெளிக்கு பின்னர் அதிமுக தலைமை கழக அலுவலகத்துக்கு வந்த ஓபிஎஸ் எடப்பாடி பழனிச்சாமியுடன் கை குலுக்கு அன்பை பரிமாறிக்கொண்டார். அதன் பின்னர் கூட்டத்தினரிடையே பேசிய ஓபிஎஸ் நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள் என கூறி உரையாற்றி அதிமுகவில் இணைந்தார்.
 
அதன் பின்னர் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ்-ஐ கழகத்தின் ஒருங்கிணைப்பாளராக அறிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருப்பார். துணை ஒருங்கிணைப்பாளராக கே.பி.முனுசாமி இருப்பார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments