Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேற்று ஒரே நாளில் 2 மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

Webdunia
வியாழன், 16 ஜூலை 2020 (07:35 IST)
நேற்று ஒரே நாளில் 2 மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு கொரோனா
நேற்று  கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து அவர் கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் வெளியான செய்தியை பார்த்தோம்
 
இந்த நிலையில் கோவை ஆட்சி தலைவரை அடுத்து நேற்று காஞ்சிபுரம் ஆட்சி தலைவர் பொன்னையா அவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று ஒரே நாளில்  2 மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
 
கடந்த சில தினங்களாக காஞ்சிபுரம் ஆட்சி தலைவர் பொன்னையா அவர்கள் காய்ச்சல் காரணமாக அலுவலகத்திற்கு வராமல் தனிமைப்படுத்திக் கொண்டிருந்ததாகவும், அவருக்கு மருத்துவர்கள் கொரோனா பரிசோதனை செய்த நிலையில் நேற்று பொன்னையாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
மேலும் மருத்துவர்களின் அறிவுரைப்படி காஞ்சிபுரம் ஆட்சி தலைவர் பொன்னையா அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments