Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை ஆல் பாஸ்! – மாணவர்கள் மகிழ்ச்சி!

Webdunia
செவ்வாய், 1 ஜூன் 2021 (10:45 IST)
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் 1 முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஆல் பாஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் காரணமாக பள்ளிகள் தொடர்ந்து செயல்படாமல் இருந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்னதாக பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக மீண்டும் மூடப்பட்டது. இந்நிலையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது குறித்து கல்வித்துறை தீவிர ஆலோசனையில் உள்ளது.

இந்நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 1 ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் தேர்வின்றி ஆல் பாஸ் வழங்குவதாக தொடக்க கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

மாணவர்களை பள்ளியிலிருந்து வெளியேற்றாமல், அனைவருக்கும் தேர்ச்சியை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments