Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏர்டெல் சிக்னல் கோளாறு: வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

Webdunia
வியாழன், 15 மார்ச் 2018 (19:35 IST)
தமிழகத்தில் ஏர்செல் சேவை இரண்டு நாட்கள் முடங்கியது குறிப்பிடத்தக்கது. இதனால் ஏர்செல் வாடிக்கையாளர்கள் மிகவும் சிரமப்பட்டனர். 
 
ஏதிர்பாராத தொழில்நுட்ப கோளாறு காரணமாக சேவையில் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் விரைவில் சரி செய்யப்படும் என்றும் ஏர்செல் நிறுவனம் முதலில் தெரிவித்தது.
 
அதன்பின்னர், ஏர்செல் திவால் என அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் ஏர்செல் வாடிக்கையாளர்கள் தங்களது எண்ணை வேறு நெட்வொர்ட் நிறுவனங்களுக்கு மாற்றி வருகின்றனர். 
 
இந்நிலையில், தற்போது ஏர்டெல்லுக்கும் சிக்னல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாலர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 
 
இது குறித்து ஏர்டெல் கூறியதாவது, சிக்னல் பிரச்சனை தற்போது சீரமைக்கப்பட்டுவிட்டது. தொழில் நுட்ப கோளாறு காரணமாக சில இடங்களில் ஏர்டெல் சிக்னல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இருப்பினும் வாடிக்கையாளர்களின் எண்ணிற்கு சிக்னல் கிடைப்பதில் பிரச்சனை இருந்தால் செல்போனை ரீஸ்டார்ட் செய்யவும் என கூறப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments