Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வு வேண்டாம் என ஏராளமான கோரிக்கைகள்! – முதல்வரிடம் அறிக்கை அளித்த ஏ.கே.ராஜன்!

Webdunia
புதன், 14 ஜூலை 2021 (10:53 IST)
தமிழகத்தில் நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்த ஏ.கே.ராஜன் குழு இன்று முதல்வரிடம் அறிக்கையை சமர்பித்துள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து குரல்கள் எழுந்து வரும் நிலையில், புதிதாக ஆட்சியமைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவை அமைத்தார்.

தமிழகம் முழுவதும் பலர் நீட் தேர்வுக்கு ஆதரவாகவும், எதிராகவும் ஏ.கே.ராஜன் குழுவுக்கு இமெயில் உள்ளிட்டவற்றின் மூலம் கருத்து தெரிவித்துள்ளனர். பல ஆயிரம் பேரின் கருத்துகளை ஆய்வு செய்த ஏ.கே.ராஜன் ஆய்வு குழு நீட் தேர்வால் என்ன பாதிப்பு என்பது குறித்த 165 பக்க ஆய்வறிக்கையை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பித்துள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நீதிபதி ஏ.கே.ராஜன் “பெறப்பட்ட மனுக்களில் அதிகமாக நீட் தேர்வுக்கு எதிராகவே பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் 8 கோடி பேரில் 5.6 கோடி முத்ரா கடன் எப்படி சாத்தியம்? பிபிசி தமிழ் கேள்விக்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கம்

பலாத்காரம் செய்யும்போது சிரிக்கணும்.. ப்ரஜ்வல் ரேவண்ணாவின் சைக்கோ டார்ச்சர்! - குற்றப்பத்திரிக்கையில் பகீர் சம்பவம்!

தமிழகத்தில் அடுத்த 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்..!

மது ஒழிப்பில் நாங்கள் பிஎச்டி, திருமாவளவன் எல்கேஜி தான்: டாக்டர் அன்புமணி

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழருடன் பேசிய முதல்வர் ஸ்டாலின்.. வீடியோ வெளியீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments