Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது.! வி.சி.க அறிவிப்பு..!!

Senthil Velan
திங்கள், 29 ஏப்ரல் 2024 (12:25 IST)
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 2024 ஆம் ஆண்டுக்கான விருதுகள் பட்டியலை அந்த கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார். அதன்படி அம்பேத்கர் சுடர் விருது நடிகர் பிரகாஷ்ராஜுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும் சிறப்புமிக்க தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமை வாய்ந்த சான்றோருக்கு "அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு  ஆகிய விருதுகளை 2007 முதல் ஆண்டுதோறும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வழங்கி வருகிறது.
 
மறைந்த முதல்வர் கருணாநிதி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, எழுத்தாளர் அருந்ததி ராய், இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன், கே.எஸ்.அழகிரி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், சொல்லின் செல்வர் ஆ.சக்திதாசன், பாவலர் வை.பாலசுந்தரம், பேராசிரியர் காதர்மொய்தீன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, ஏ.எஸ்.பொன்னம்மாள், கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் உள்ளிட்ட பலருக்கு இதுவரை விடுதலை சிறுத்தைகள் கட்சி விருதுகள் வழங்கி உள்ளது.
 
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 2024 ஆம் ஆண்டுக்கான விருதுகள் பட்டியலை அந்த கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அறிவித்துள்ளார். அதன்படி அம்பேத்கர் சுடர் விருது நடிகர் பிரகாஷ்ராஜுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெரியார் ஒளி விருதினை திராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்கறிஞர் அருள் மொழிக்கு வழங்கப்படுகிறது.
 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா. முத்தரசனுக்கு மார்க்ஸ் மாமணி விருது அறிவித்துள்ளனர். இந்திய சமூக நீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணத்திற்கு காமராசர் கதிர் விருது அறிவித்துள்ளனர். பேராசிரியர் ராஜ்கௌதமனுக்கு அயோத்திதாசர் ஆதவன் விருது அறிவித்துள்ளனர். 

ALSO READ: தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க கோரி மனு..! நாளை விசாரிப்பதாக நீதிமன்றம் ஒப்புதல்..!!
 
வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா மேனாள் மாநிலத் தலைவர் எஸ்.என். சிக்கந்தர் அவர்களுக்கு காயிதேமில்லத் பிறை விருது வழங்கப்படும். கல்வெட்டியலறிஞர் எ.சுப்பராயலு அவர்களுக்கு செம்மொழி ஞாயிறு விருது வழங்கப்படும். விசிக விருதுகள் வழங்கும் விழா சென்னையில் அடுத்த மாதம் 25ஆம் தேதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments