Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்படியெல்லாம் செய்ய ரூம் போட்டு யோசிப்பிங்களா? ருசிகர சம்பவம்

Webdunia
செவ்வாய், 5 டிசம்பர் 2017 (11:27 IST)
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு எருமை மாட்டின் மேல் வந்த பார்த்திபன் என்பவர் கலெக்டர் ரோஹிணியிடம் புகார் மனு அளித்தார்.
சேலத்தில் நடைபெறும் பாதாள சாக்கடைத் திட்டம், மேம்பால பணிகள், தனிக் குடிநீர் திட்டம், திருமணிமுத்தாறு திட்டம் ஆகிய மாநகராட்சி பணிகள் நடைபெறாமல் கிடப்பில் உள்ளதால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
 
சேலம் மாவட்ட கலெக்டர் வீடு வீடாக சென்று டெங்கு கொசுவின் உற்பத்தியைத் தடுக்க ஆய்வு மேற்கொண்டு, டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் இருந்தால் அபராதம் விதித்து வருகிறார். ஆனால் திருமணிமுத்தாறில் கொசு ஒழிப்பதற்கு கலெக்டர் ரோஹிணி நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் சேலம் மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலைத் துறை அனைத்தும் செயல்படாமல் எருமை மாட்டின் மேல் மழை பெய்தால் எப்படி மந்தமாக இருக்குமோ, அதேபோல் சேலம் மாநகராட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை மக்களிற்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகத் தான் இது போல செய்ததாக பார்த்திபன் கூறியுள்ளார். இந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments