Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்ளாட்சி தேர்தலில் வென்ற மூதாட்டி! மதுரையில் ஆச்சர்யம்!

Webdunia
வியாழன், 2 ஜனவரி 2020 (17:42 IST)
தமிழக ஊராட்சி அமைப்புகளுக்கான உள்ளாட்சி தேர்தலில் மூதாட்டி ஒருவர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. இதற்கான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அரிட்டாப்பட்டியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 79 வயது மூதாட்டி வீரம்மாள் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கையில் எதிர் வேட்பாளரைவிட 195 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ள வீரம்மாள் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் ஊராட்சி தலைவர் பதவி வகிப்பவர்களில் மிகவும் அதிக வயது கொண்ட நபராக வீரம்மாள் இருப்பார் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments