Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாரத அன்னைக்கு சிலை வைப்பதற்குக் கூட உரிமை இல்லையா? அண்ணாமலை ஆவேசம்..!

பாரத அன்னைக்கு சிலை வைப்பதற்குக் கூட உரிமை இல்லையா? அண்ணாமலை ஆவேசம்..!
, செவ்வாய், 8 ஆகஸ்ட் 2023 (11:39 IST)
விருதுநகர் பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பாரத அன்னையின் சிலையை காவல்துறையினர் நேற்று இரவு அப்புறப்படுத்திய நிலையில்  பாரத அன்னையின் சிலை வைக்க கூட ஒரு கட்சிக்கு உரிமை இல்லையா என அண்ணாமலை ஆவேசமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
விருதுநகர் பாரதிய ஜனதா மாவட்ட அலுவலகத்தில்  நிறுவப்பட்டிருந்த பாரத அன்னையின் சிலையை சுவர் ஏறிக் குதித்து காவல்துறையினர் நேற்று இரவு அப்புறப்படுத்தியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 
 
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஊழல் திமுக ஆட்சியில், ஒரு கட்சிக்கு சொந்தமான இடத்தில் பாரத அன்னைக்கு சிலை வைப்பதற்குக் கூட உரிமை இல்லாத சூழலே நிலவி வருகிறது. 
 
ஊழல் திமுக அரசின் அவலங்களை எங்கள் என் மண் என் மக்கள் யாத்திரையின் மூலமாக மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதால் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் அச்சத்தின் உச்சியில் இருப்பதன் வெளிப்பாடே இந்த நடவடிக்கை. 
 
பாரத அன்னையின் புகழ் ஓங்குக!
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்.. தொடங்கிய 2 நிமிடங்களில் ஒத்திவைப்பு..!