Webdunia - Bharat's app for daily news and videos

Install App

200 விளையாட்டு வீரர்களுக்கு ஆண்டுதோறும் ஊக்கத்தொகைகள் -அமைச்சர் உதயநிதி டுவீட்

Webdunia
சனி, 6 மே 2023 (19:03 IST)
திறன்மிகு 200 விளையாட்டு வீரர்களுக்கு ஆண்டுதோறும் ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டிற்காக  ஊக்கத்தொகை பற்றி அமைச்சர் உதயநிதி தன் டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது.  கடந்தாண்டு, புதிதாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை  உருவாக்கப்பட்டு, இதன் அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றார்.

அவர் பதவியேற்ற பின் பல புதிய அறிவிப்புகள், திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், திறன்மிகு 200 விளையாட்டு வீரர்களுக்கு ஆண்டுதோறும் ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டிற்காக  ஊக்கத்தொகை பற்றி அமைச்சர் உதயநிதி தன் டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

அதில்,''ELITE, MIMS, CDS ஆகிய பிரிவுகளின் கீழ்  தமிழகவிளையாட்டுத்துறை சார்பில் திறன்மிகு 200 விளையாட்டு வீரர்களுக்கு ஆண்டுதோறும் ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கான தகுதியுடைய வீரர் - வீராங்கனையர் இன்றிலிருந்து மே 20 ஆம் தேதி மாலை வரை  https://sdat.tn.gov.in இணையதளத்தின் வழியே தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments