Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதை தடை செய்யலைனா நபிகளை கிண்டல் பண்ணுவேன்! – ஓவியர் சுரேந்திர குமார் கைது!

Webdunia
செவ்வாய், 14 ஜூலை 2020 (10:58 IST)
முகமது நபியை கிண்டல் செய்து சித்திரம் வெளியிடுவதாக பதிவிட்ட ஓவியர் சுரேந்திரகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமீப காலமாக சமூக வலைதளங்களில் மதரீதியான மோதல்கள், வாக்குவாதங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றில் இந்து மத கடவுளர்கள் குறித்த கதைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சிலர் பதிவிட்டிருந்தது சமூக வலைதளங்களில் சர்ச்சைக்கு உள்ளாகி வந்தது.

இந்நிலையில் அந்த சர்ச்சையின் போது தனது ட்விட்டரில் பதிவிட்ட ஓவியர் சுரேந்திர குமார், குறிப்பிட்ட அந்த யூட்யூப் சேனலில் பின்னணியில் இஸ்லாமிய அமைப்புகள் இருந்து செயல்படுவதாக குற்றம் சாட்டியதோடு, அந்த வீடியோவை தடை செய்யாத நிலையில் நபிகள் நாயகத்தை கிண்டல் செய்யும் வகையில் கார்ட்டூனை வெளியிடுவதாகவும் பதிவிட்டிருந்தார். இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து இஸ்லாமிய அமைப்புகள் சில அளித்த புகாரின் பேரில் ஓவியர் சுரேந்திரகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் மேலும் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments