Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிய தடகள கோப்பை: 400மீ தடை தாண்டுதலில் தமிழக வீரர் வெண்கலப் பதக்கம் - சீமான் வாழ்த்து

Webdunia
சனி, 15 ஜூலை 2023 (20:34 IST)
தாய்லாந்தில் நடைபெற்று வரும் ஆசிய தடகள கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற தமிழ்நாட்டினைச் சேர்ந்த தடகளவீரர்  சந்தோஷ்குமார் தமிழரசன், 400மீ தடை தாண்டுதல் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இதற்கு சீமான் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில்,

’’தாய்லாந்தில் நடைபெற்று வரும் ஆசிய தடகள கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற தமிழ்நாட்டினைச் சேர்ந்த தடகளவீரர் அன்புமகன் சந்தோஷ்குமார் தமிழரசன், 400மீ தடை தாண்டுதல் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனைபடைத்துள்ள செய்தியறிந்து மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைந்தேன்.

ஆசிய தடகளப் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் தமிழர் என்ற பெருமையைப் பெற்றுள்ள மகன் சந்தோஷ்குமார் தமிழரசனுக்கு என்னுடைய பாராட்டுகள்!

தன்னுடைய அயராத முயற்சியினால் தனித்திறனை வளர்த்து, தமிழ் மண்ணிற்கும், இனத்திற்கும் பெருமை சேர்த்துள்ள அன்புமகன் சந்தோஷ்குமார் மேலும் பல பன்னாட்டுப் போட்டிகளில் பங்கேற்று, பதக்கங்கள் வென்று சாதனை புரிய  என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments