Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்பாவி பெண்ணை கன்னத்தில் அறைந்த அதிகாரிக்கு பதவியுயர்வு

Webdunia
செவ்வாய், 13 ஜூன் 2017 (22:50 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருப்பூர் மாவட்டம், சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடையை மூடவேண்டும் என்பதை வலியுறுத்தி பெண்கள் உள்பட அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர்.



 


அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட அப்பாவி பெண் ஒருவரை திருப்பூர் கூடுதல் எஸ்.பி. பாண்டியராஜன் சரமாரியாக கன்னத்தில் அறைந்தார். கன்னத்தில் அறைவாங்கிய ஈஸ்வரி என்ற பெண்ணுக்கு காது கேட்கும் திறன் குறைந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் பெண் என்றும் பாராமல் அப்பாவி ஒருவரை தாக்கிய காவல்துறை அதிகாரி பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால் தமிழக அரசு அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக அவருக்கு எஸ்பி ஆக பதவி உயர்வு அளித்துள்ளது. இது போராட்டம் செய்த பொதுமக்களை மேலும் வெறுப்படைய செய்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments