Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டசபை கதவுகளை மூடிவிட்டு தான் இன்று வாக்கெடுப்பு நடக்கும்!

சட்டசபை கதவுகளை மூடிவிட்டு தான் இன்று வாக்கெடுப்பு நடக்கும்!

Webdunia
சனி, 18 பிப்ரவரி 2017 (09:53 IST)
29 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழக சட்டசபையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ளது. இந்த வாக்கெடுப்பு ரகசிய வாக்கெடுப்பாக இருக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு சபாநாயகர் தனபாலிடம் கோரிக்கை வைத்தனர்.


 
 
ஆனால் இந்த வாக்கெடுப்பு ரகசியமாக இல்லாமல் தலைகளை எண்ணும் வாக்கெடுப்பாகத்தான் இருக்கும் என தகவல்கள் வருகின்றன. ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் அதனை வரவேற்போம் என எதிர்க்கட்சி திமுகவும் கூறியுள்ளது.
 
தமிழகமே எதிர்பார்க்கும் இந்த சிறப்பு சட்டசபை கூடியதும் நம்பிக்கை கோரும் தீர்மானத்தைக் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொண்டுவந்து பேசுவார். பின்னர் சட்டசபை கதவுகள் மூடப்படும். அதன் பின்னர் தான் வாக்கெடுப்பு நடைபெறும்.
 
சட்டசபை கதவுகள் மூடப்பட்ட பின்னர் பின்னர் 6 பிரிவாக எம்எல்ஏக்களிடம் வாக்கெடுப்பு நடைபெறும். ஆதரிப்போர், எதிர்ப்போர், நடுநிலை வகிப்போர் என பிரித்து வாக்கெடுப்பு நடைபெறும். காலை 11.30 மணிக்கு ஓட்டெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் சபாநாயகர் அன்றே முடிவுகளை அறிவிப்பார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.80 கட்டணத்தில் நாள் முழுவதும் பயணம்.. ராமேஸ்வரம் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

சிறுமி கொலை வழக்கு.! கைதானவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நிறைவு..!!

பதவியை ராஜினாமா செய்த உயர்நீதிமன்ற நீதிபதி.. பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டி..!

பம்பரம் சின்னம் கோரிய வழக்கு.! தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு.!!

.விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பெண் பயணி!

அடுத்த கட்டுரையில்
Show comments