Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவில் என்னை இணைப்பது போல் தெரியவில்லை - அழகிரி

Webdunia
புதன், 22 ஆகஸ்ட் 2018 (20:11 IST)
திமுக தலைவர் கருணாநிதி மறைந்த பின்னர் கட்சி இரண்டாக உடையாமல் காப்பாற்ற மு.க.அழகிரி கட்சியில் மீண்டும் இணைத்து கொள்ளப்படுவார் என்றும் அழகிரியை பகைத்து கொண்டு தென் தமிழகத்தில் திமுக பெரிய வெற்றியை பெற முடியாது என்றும் அரசியல் விமர்சகர்கள் கணித்திருந்தனர்.
 
ஆனால் சமீபத்தில் திமுகவில் நடைபெற்று வரும் சம்பவங்களை பார்த்தால் அழகிரியை திமுகவில் திரும்ப சேர்த்து கொள்வதற்கான அறிகுறியே தெரியவில்லை. இந்த நிலையில் செப்டம்பர் 5ஆம் தேதி கருணாநிதி நினைவிடத்தில் அமைதிப்பேரணி நடைபெறும் என்று மு.க.அழகிரி அறிவித்தார். இந்த அறிவிப்பு திமுக வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது. 
 
இந்த நிலையில் இன்று மதுரை விமான நிலையத்தில் பேட்டியளித்த மு.க.அழகிரி, 'திமுகவில் என்னை இணைப்பது போல் தெரியவில்லை என்றும், நேரம் வரும்போது என் மனக்குமுறலை மக்களிடம் வெளிப்படுத்துவேன்' என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் சென்னையில் செப்டம்பர் 5ஆம் தேதி கருணாநிதி நினைவிடம் நோக்கி அமைதி பேரணி அமைதியாக நடைபெறும் என்றும் இந்த அமைதி பேரணியில் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்றும் அவர் மேலும் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments