Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாரதிராஜாவின் முன்ஜாமீன் வழக்கு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Webdunia
திங்கள், 2 ஜூலை 2018 (20:50 IST)
சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் தேசத்துக்கு விரோதமாக பேசியதாகவும், இந்த போராட்டத்தின்போது போலீசாரை தாக்க தூண்டியதாகவும் இயக்குனர் பாரதிராஜா மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளின் அடிப்படையில் அவர் எந்த நேரமும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
 
இந்த நிலையில் தனக்கு முன்ஜாமீன் கேட்டு பாரதிராஜா மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தப்போது இயக்குநர் பாரதிராஜாவுக்கு 2 வழக்குகளில் நிபந்தனை முன்ஜாமீன் வழங்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
 
இயக்குனர் பாரதிராஜா திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் தினமும் காலை 10.30 மணிக்கு விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments