Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பைக் ரேஸில் ஈடுபடுபவர்களுக்கு இது கிடையாது: சென்னை போலீஸ் அதிரடி அறிவிப்பு

Webdunia
வியாழன், 28 டிசம்பர் 2017 (05:09 IST)
சென்னையில் பணக்கார இளைஞர்களின் பொழுதுபோக்கு விளையாட்டான பைக் ரேஸ், அப்பாவி பொதுமக்களுக்கு எமனாக மாறிவிடுகிறது. சமீபத்தில் கூட சென்னை மெரீனா அருகே பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் வரும் புத்தாண்டு தினத்திலும் பைக் ரேஸில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என காவல்துறைக்கு தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் சென்னை காவல்துறை அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி இனிமேல் பைக் ரேஸில் ஈடுபடுபவர்களுக்கு பாஸ்போர்ட்டுக்கான தடையில்லா சான்றிதழ் வழங்கப்படாது என்றும் அவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் பாயும் என்றும் சென்னைப் போக்குவரத்துக் காவல்துறை கூடுதல் ஆணையர் அருண் எச்சரித்துள்ளார்.

மேலும் வரும் 31ஆம் தேதி இரவு முதல் சென்னையின் முக்கிய இடங்களில் இரவு 9 மணிக்கு மேல் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கத்திப்பாரா, அண்ணா மேம்பாலங்கள் தவிர மற்ற மேம்பாலங்கள் அனைத்தும் இரவு11.30 மணி முதல் 1 மணி வரையில் போக்குவரத்துக்கு தடை செய்யப்படும் என்றும் குயின்மேரி கல்லூரி வளாகம், பிரசிடென்சி கல்லூரி,சுவாமி சிவனாந்த சாலை, சேப்பாக்கம் ரெயில் நிலையம், லயால்ட்ஸ் ரோடு உள்ளிட்ட மெரினாவில் 8 இடங்களில் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments