Publish Date: Tue, 05 Jul 2022 (10:52 IST)
Updated Date: Tue, 05 Jul 2022 (10:55 IST)
திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் பாஜக இன்று போராட்டம் நடத்தி வருகிறது.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக தேர்தல் அறிக்கை கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என பாஜக குற்றம் சாட்டி வருகிறது
இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் இன்று பாஜக தனது கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறது
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றுள்ளார். அதேபோல் மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்ட பிரமுகர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
திமுக ஆட்சியை எதிர்த்து பாஜக மாநில முழுவதும் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.