Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அய்யாக்கண்ணு மீது தாக்குதல் - பாஜகவினர் அட்டுழியம்

Webdunia
வியாழன், 31 மே 2018 (09:54 IST)
மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய அய்யாக்கண்ணுவை பாஜகவினர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில், மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தினார். 
 
மரபணு மாற்றப்பட்ட விதைகளின்மூலம் தயாரிக்கப்பட்ட உணவுப்பொருட்களை சாப்பிட்டு வந்தால் 50% ஆண்கள் தங்களுடைய ஆண்மையை இழக்க வாய்ப்புண்டு. இதனால் பெண்களின் கருத்தரிக்கும் சக்தியும் குறையும் என கூறினார்.
மரபணு விதைகளுக்கு எதிராக அய்யாக்கண்ணு உள்ளிட்ட சில விவசாயிகள் முழக்கமிட்டபடி போராட்டம் நடத்திக் கொண்டிருந்த போது அங்கு வந்த பாஜகவினர் சிலர் அய்யாக்கண்ணு மீதும், அங்கு போராடியவர்கள் மீதும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது. அய்யாக்கண்ணு மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அரக்கோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

வனக் கல்லூரியில் 27-வது மாநில அளவிலான வனத்துறை விளையாட்டுப் போட்டியை - வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்!

அடுத்த கட்டுரையில்
Show comments