Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவி தற்கொலை விவகாரம்; விசாரணை செய்ய குழு அமைத்த பாஜக!

Webdunia
வியாழன், 27 ஜனவரி 2022 (15:38 IST)
தஞ்சை மாவட்டத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தை விசாரணை மேற்கொள்ள பாஜக 4 பேர் கொண்ட குழுமை அமைத்துள்ளது.

தஞ்சை மாவட்டம் திருகாட்டுப்பள்ளியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி லாவண்யா விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தற்கொலை விவகாரத்தில் மாணவியை விடுதியில் அதிக வேலை வாங்கியதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக வாக்குமூலம் அளித்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

ஆனால் மதமாற மாணவியை வற்புறுத்தியதாலேயே அவர் இறந்ததாக கூறி பாஜகவினர் வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியதுடன், மாணவிக்கு நீதி கேட்டு போராட்டமும் நடத்தி வந்தனர். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள மாணவியின் வாக்குமூல வீடியோவில் மதமாற்றம் குறித்த தகவல்கள் இல்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் மாணவி தற்கொலை குறித்து விசாரணை மேற்கொள்ள மத்திய பிரதேச பாஜக எம்.பி சந்தியாராய் உட்பட 4 பேர் கொண்ட சிறப்பு குழுவை அமைத்துள்ளது பாஜக. இந்த தற்கொலை விவகாரம் குறித்த விரிவான அறிக்கையை கட்சிக்கு இந்த குழு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments