Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடி விபத்து: 4 பேர் உடல் சிதறி உயிரிழப்பு

Mahendran
புதன், 1 மே 2024 (11:03 IST)
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரியில் வெடி விபத்து ஏற்பட்ட நிலையில் அதில் 4 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளதாக் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
 
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே  ஆவியூர் - கீழஉப்பிலிக் குண்டு சாலையில் உள்ள தனியார் கல்குவாரியில் இன்று வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. பாறைகளை உடைக்க பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளை, குவாரி அருகே உள்ள அறையில் இறக்கியபோது வெடிமருந்துகள் வெடித்து சிதறின என்றும், இந்த வெடி விபத்தில் 4 பேர் உடல் சிதறி பலியானதாகவும், 2 வாகனங்கள் முற்றிலும் சேதம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
 
இந்த விபத்து குறித்து கேள்விப்பட்டு சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினர் சென்றாலும், சம்பவ இடத்தில் வெடிமருந்துகள் இருப்பதால் அந்த பகுதிக்கு தீயணைப்புத்துறையினர், போலீசார் செல்ல முடியாத நிலை இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
 
மேலும் வெடி விபத்தால் அப்பகுதியை சுற்றி, 20 கிலோ மீட்டர் தூரம் வரை அதிர்வுகள் ஏற்பட்டு வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments