Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புதைக்கப்பட்ட இரண்டே நாட்களில் சிறுமியின் உடல் மாயம்.. தஞ்சை அருகே பரபரப்பு..!

Advertiesment
தஞ்சாவூர்

Mahendran

, வியாழன், 4 டிசம்பர் 2025 (12:25 IST)
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அடுத்துள்ள பந்தநல்லூர் அருகே அரசடி கிராமத்தில், உடல்நலக்குறைவால் உயிரிழந்த 10 வயது பள்ளி மாணவி தர்ஷிகாவின் உடல், புதன்கிழமை மாலை சுடுகாட்டில் புதைக்கப்பட்டது.
 
மறுநாள் காலை, சடங்குகள் செய்வதற்காக குடும்பத்தினர் சுடுகாட்டிற்கு சென்றபோது, சிறுமியின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, உடல் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
 
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பந்தநல்லூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மாயமான சடலம் இன்னும் ஆழத்தில் உள்ளதா, அல்லது நரபலி கொடுப்பதற்காக யாரேனும் தோண்டி எடுத்து சென்றனரா என்ற கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
சுடுகாட்டில் இருந்து சிறுமியின் உடல் மாயமான இந்த மர்ம சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மனைவிக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகம்.. 14 வயது மகளின் கழுத்தை பிளேடால் அறுத்த கணவர் கைது..!