Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்செந்தூர் முருகன் கோயில் செல்போன் பயன்படுத்த தடை: ஐகோர்ட் உத்தரவு

Webdunia
புதன், 9 நவம்பர் 2022 (12:09 IST)
திருச்செந்தூர் முருகன் கோயிலில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்குமாறு இந்து சமய அறநிலையத் துறைக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது 
 
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளே செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது
 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் உள்ளே செல் போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்குமாறு இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது
 
மேலும் கோவில் சிலைகளை புகைப்படம் எடுப்பது சிலை திருட்டுக்கு வழிவகுப்பதாக உள்ளதாகவும் அதனால் செல்போன் தடை முக்கியம் என்று மதுரை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது
 
இதுகுறித்து கோயில் அர்ச்சகர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் இந்த பரபரப்பான தீர்ப்பை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் விரைவில் திருச்செந்தூர் கோவில் உள்ளே செல்போன் பயன்படுத்த தடை விதிக்கும் உத்தரவை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments