Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
, வெள்ளி, 15 டிசம்பர் 2023 (21:30 IST)
அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் முதல் பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வரும் நிலையில், தமிழகத்தில் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

 இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 15  மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு, கடலூர், அரியலூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.

மேலும், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, வேலூர், புதுச்சேரி  ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனது 4 குழந்தைகளை கொன்றதாக சிறையில் அடைக்கப்பட்ட ஆஸ்திரேலிய பெண் விடுவிக்கப்பட்டது ஏன்?