Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எலி செய்த வேலை.. மாயமான 130 சவரன் நகை! – போலீஸை குழப்பிய குடும்பம்!

Webdunia
திங்கள், 13 பிப்ரவரி 2023 (12:52 IST)
சென்னையில் 130 சவரன் நகை திருடு போனதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நடந்த விசாரணை குறித்த செய்தி வைரலாகியுள்ளது.

சென்னை எம்ஜிஆர் நகரை சேர்ந்த சரவணன் என்பவர் ஐடி நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி சிறுசேரியில் உள்ள மற்றொரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவில் வீடுபுகுந்து பீரோவில் தாங்கள் வைத்திருந்த 130 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டதாக அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரின் அடிப்படையில் கைரேகை நிபுணர்களோடு அவர்களது வீட்டிற்கு சென்று போலீஸார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பீரோவை திறந்து பார்த்தபோது அதில் 130 சவரன் நகைகளும் அப்படியே இருந்துள்ளது. இது போலீஸாருக்கே குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில் தம்பதியரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணையில் நள்ளிரவு 12.30 மணியளவில் பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்டதாகவும், பீரோ திறந்து கிடந்ததால் உள்ளே பார்த்தபோது நகை திருட்டு போயிருந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அங்கு எலி தொல்லை அதிகமுள்ள நிலையில் எலிகள் பாத்திரத்தை உருட்டியிருப்பதை கள்வர்கள் புகுந்து விட்டதாக தம்பதியினர் தவறாக புரிந்து கொண்டு நகை இருப்பதை சரியாக கவனிக்காமல் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

பின்னர் அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கிய போலீஸார் பொருட்கள் காணவில்லை என்றால் நிதானமாக தேடுங்கள் என கூறியுள்ளனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த ஹோட்டல் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை - மாணிக்கம்எம்.பி!

குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி..வளைகுடா நாட்டில் இருந்து வந்தவரா?

பெண்கள் இரவுப்பணி செய்ய கூடாதா? மே.வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

மணிப்பூரில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு.. இயல்பு நிலை திரும்புகிறதா?

திருமணம் முடிந்தவுடன் மணப்பெண்ணிடம் நூறு ரூபாய் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி டீல் போட்ட மணமகனின் நண்பர்கள் பட்டாளம்!

அடுத்த கட்டுரையில்
Show comments